அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு


அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 30 Nov 2021 8:59 PM GMT (Updated: 30 Nov 2021 8:59 PM GMT)

ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ராஜபாளையம்,
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. அதேபோல ராஜபாளையத்திலும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. விட்டு, விட்டு மழை பெய்தது. இந்த மழை நேற்று மதியம் வரை பெய்தது. இதனால் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா, தென்காசி தேசிய நெடுஞ்சாலை, மகப்பேறு மருத்துவமனை, சங்கரன்கோவில் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

Next Story