விராலிமலை அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு


விராலிமலை அருகே  விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 1 Dec 2021 5:33 PM GMT (Updated: 1 Dec 2021 5:33 PM GMT)

விராலிமலை அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விராலிமலை:
நகை-பணம் திருட்டு 
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள விராலூரை சேர்ந்தவர் அழகர் (வயது 31). விவசாயி. இவர் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. 
இதையடுத்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.3 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story