திருவரங்குளம் அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி


திருவரங்குளம் அருகே  கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 2 Dec 2021 5:09 PM GMT (Updated: 2 Dec 2021 5:09 PM GMT)

திருவரங்குளம் அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

திருவரங்குளம்:
நண்பர்கள் 
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே தோப்புக்கொல்லை இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் கரண் (வயது 23). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் தோப்புக்கொல்லையை சேர்ந்த முத்துச்சாமி மகன் சுசீந்திரன் (27). கொத்தனார்.
இவர்கள் இருவரும் நேற்று புதுக்கோட்டைக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கரண் ஓட்டினார். தோப்புக்கொல்லை கேப்பரை திருப்பத்தில் வந்த போது, எதிரே வந்த கார் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. 
2 வாலிபர்கள் பலி
இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வல்லத்திராக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
விபத்தில் இறந்த கரணுக்கு திருமணம் ஆகவில்லை. சுசீந்திரனுக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும், 4 வயதில் மகனும் உள்ளனர். கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story