தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை


தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை
x
தினத்தந்தி 3 Dec 2021 7:17 PM GMT (Updated: 3 Dec 2021 7:17 PM GMT)

வத்திராயிருப்பு அருகே தென்னை மரங்களை யானை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு அருகே தென்னை மரங்களை யானை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 
காட்டு யானை 
வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, கரடி, மான், மிளா, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரம் அத்தி கோவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை, மா, வாழை ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். 
இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து இறங்கும் காட்டு யானைகள் அத்தி கோவில் அடிவார பகுதியில் உள்ள தென்னை, மா தோப்பிற்குள் நுழைந்து தென்னை, மா, மரங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. 
விவசாயிகள் கவலை 
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மலைப்பகுதியில் இருந்து இறங்கிய யானை அத்தி கோவில் பகுதியில் உள்ள ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை மரங்களை வேரோடு சாய்த்தும், தென்னை மரங்களில் உள்ள குருத்துக்களை உடைத்து சேதப்படுத்தியது. 
இவ்வாறு தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், வனத்துறையினர், மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கூறினர்.

Next Story