மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 3 Dec 2021 7:19 PM GMT (Updated: 3 Dec 2021 7:19 PM GMT)

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சாத்தூர்,
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
சிறப்பு அலங்காரம் 
சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு  பால், பன்னீர், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 
தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் எண்ணற்ற அய்யப்ப பக்தர்களும் கலந்து கொண்டனர். சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
சாமி தரிசனம் 
இதேபோல் சாத்தூர் முக்குராந்தலில் உள்ள மாரியம்மன் கோவில், வடக்கு ரத வீதியில் உள்ள காளியம்மன் கோவில், நாடார் கீழத்தெருவில் உள்ள மாரியம்மன் கோவில், பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ள பத்ரகாளியம்மன் கோவில்களிலும் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story