நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 40 பேருக்கு கொரோனா மூதாட்டி பலி


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 40 பேருக்கு கொரோனா மூதாட்டி பலி
x
தினத்தந்தி 6 Dec 2021 5:26 PM GMT (Updated: 6 Dec 2021 5:26 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 40 பேருக்கு கொரோனா மூதாட்டி பலி

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று புதிதாக 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
40 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 53,719 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் பிற மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 53,717 ஆக குறைந்தது.
இதற்கிடையே நேற்று புதிதாக 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 757 ஆக அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று 49 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இம்மாவட்டத்தில் இதுவரை 52,770 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 476 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மூதாட்டி பலி
நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு 510 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 511 ஆக அதிகரித்துள்ளது.

Next Story