விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 6 Dec 2021 7:14 PM GMT (Updated: 6 Dec 2021 7:14 PM GMT)

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:

பாளையங்கோட்டை அருகே உள்ள படப்பகுறிச்சியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 36). கூலித்தொழிலாளியான இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட துரைராஜ் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துரைராஜ் நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார். 

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story