வியாபாரி தீக்குளித்து தற்கொலை


வியாபாரி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 6 Dec 2021 7:22 PM GMT (Updated: 6 Dec 2021 7:22 PM GMT)

வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:

நெல்லை டவுன் சிவா தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 45). இவர் தள்ளுவண்டியில் வேர்க்கடலை வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும், அவருடைய மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினமும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்து காணப்பட்ட வேல்முருகன் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வேல்முருகன் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story