வீடு புகுந்து நகை திருடிய பெண் கைது


வீடு புகுந்து நகை திருடிய பெண் கைது
x
தினத்தந்தி 6 Dec 2021 7:30 PM GMT (Updated: 6 Dec 2021 7:30 PM GMT)

வீடு புகுந்து நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

பாளையங்கோட்டை அருகே உள்ள கீழப்பாட்டம் யாதவர் தெருவை சேர்ந்தவர் ரமாசெல்வி (வயது 39). இவர் சம்பவத்தன்று பீரோவில் நகைகளை வைத்துவிட்டு பீடி கடைக்கு சென்று விட்டார். மீண்டும் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 20 கிராம் நகை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ரமாசெல்வி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தியதில், ரமாசெல்வியின் வீட்டிற்கு குப்பை எடுப்பதற்காக வந்த கீழப்பாட்டத்தை சேர்ந்த ஆனந்தி (39) என்பவர் பீரோவில் இருந்த நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று ஆனந்தியை கைது செய்தனர். அவரிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டது.

Next Story