வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவர், கல்லூரி மாணவி தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவர், கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 7 Dec 2021 1:35 PM GMT (Updated: 7 Dec 2021 1:35 PM GMT)

வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவர், கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டனர்.

வேடசந்தூர்:
வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவர், கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டனர். 
கல்லூரி மாணவி
வேடசந்தூர் குமரன்நகரை சேர்ந்தவர் பாக்கியநாதன். டீக்கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஜெரினா கேத்தரின் (வயது 19). இவர் எரியோடு அருகே உள்ள காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெரினா கேத்தரின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 
பின்னர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெரினா கேத்தரின் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றும் சிக்கியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
கொடைக்கானல்
இதேபோல் கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் கார்த்தி (வயது 14). இவர் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். தந்தை இறந்த நிலையில் கார்த்தி, தனது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தார். இந்தநிலையில் அவர் பள்ளிக்கூடத்திற்கு சரிவர செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது பாட்டி கண்டித்தார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கார்த்தி, தலைவலி தைலத்தை குடித்தார். 
இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானலில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்தி உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து கொடைக்கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story