சின்னசேலம் அருகே லாரி டிரைவர் மர்மசாவு சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்


சின்னசேலம் அருகே லாரி டிரைவர் மர்மசாவு சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்
x

சின்னசேலம் அருகே லாரி டிரைவர் மர்மசாவு சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்

சின்னசேலம்

சின்னசேலம் அருகே கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன்(வயது 33). லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் விவசாய நிலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் கோவிந்தன் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது உறவினர்கள் கீழ்குப்பம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள விருத்தாசலம் - சேலம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் விருத்தாசலம்- சேலம் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 


Next Story