மது விற்ற பெண் கைது


மது விற்ற பெண் கைது
x
தினத்தந்தி 7 Dec 2021 7:38 PM GMT (Updated: 7 Dec 2021 7:38 PM GMT)

மது விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை மற்றும் போலீசார் கோவிந்தபுத்தூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கோவிந்தபுத்தூர் மெயின்ரோட்டை சேர்ந்த ராஜகுமாரி(வயது 43) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் இருந்து விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ராஜகுமாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story