மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2021 7:44 PM GMT (Updated: 7 Dec 2021 7:44 PM GMT)

சங்கரன்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தேரடி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் அசோக் ராஜ் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட செயலாளர் முத்துபாண்டி கண்டன உரையாற்றினார்.  

மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். சங்கரன்கோவில் நகரில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் பாலுச்சாமி, வேலுச்சாமி, மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story