சாலை தடுப்பில் மோதி கொத்தனார் பலி


சாலை தடுப்பில் மோதி கொத்தனார் பலி
x
தினத்தந்தி 8 Dec 2021 7:04 PM GMT (Updated: 8 Dec 2021 7:04 PM GMT)

சாலை தடுப்பில் மோதி கொத்தனார் பலி

திருப்புவனம்
மதுரை எல்லீஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது47). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு சென்று விட்டு இரவு மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். மதுரை- பரமக்குடி நான்குவழி சாலையில் சக்குடி விலக்கு அருகே வரும்போது நிலைதடுமாறி சாலையின் மீது இருந்த இரும்பு தடுப்பில் மோதினார். இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே மாரிமுத்து இறந்தார். இச்சம்பவம் குறித்து இவரது மனைவி ஆறுமுகம் திருப்புவனம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story