மோட்டார் சைக்கிளை நிதி நிறுவனத்தினர் எடுத்துச் சென்றதால் வாலிபர் தற்கொலை


மோட்டார் சைக்கிளை நிதி நிறுவனத்தினர் எடுத்துச் சென்றதால் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 8 Dec 2021 7:24 PM GMT (Updated: 8 Dec 2021 7:24 PM GMT)

தவணை கட்டவில்லை என்று மோட்டார் சைக்கிளை நிதி நிறுவனத்தினர் எடுத்துச் சென்றதால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

விருதுநகர், 
தவணை கட்டவில்லை என்று மோட்டார் சைக்கிளை நிதி நிறுவனத்தினர் எடுத்துச் சென்றதால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
காவலாளி
விருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தையில் உள்ள ஒரு தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர், பொம்முராஜ் (வயது 32). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று மோட்டார் சைக்கிள் வாங்கியிருந்தார்.
இந்த நிலையில் கடன் தவணையை சரியாக கட்டாததால் தனியார் நிதிநிறுவனத்தினர் அந்த மோட்டார் சைக்கிளை பறித்து எடுத்துச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. 
தற்கொலை
இதனால் மனவருத்தம் அடைந்த பொம்முராஜ் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்ததாக தெரியவருகிறது. மயங்கிய நிலையில் கிடந்த அவரை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி  பொம்முராஜ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவருடைய தந்தை சின்னக்கண்ணு (51) கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Next Story