மக்கள் நீதிமன்றம் மூலம் 1,792 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றம் மூலம் 1,792 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 11 Dec 2021 8:40 PM GMT (Updated: 11 Dec 2021 8:40 PM GMT)

குமாியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1,792 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

நாகர்கோவில், 
குமாியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1,792 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மக்கள் நீதிமன்றம்
கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க  மக்கள் நீதிமன்றம்(லோக் அதாலத்) மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை மற்றும் தக்கலை ஆகிய 5 கோர்ட்டுகளில் லோக் அதாலத் நிகழ்ச்சி (மக்கள் நீதி மன்றம்) நேற்று நடைபெற்றன.
இதில் குடும்ப நலவழக்கு, வாகன விபத்து இழப்பீடு, சொத்து பிரச்சினை, காசோலை மோசடி உள்ளிட்ட வழக்குகள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 207 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
1,792 வழக்குகளுக்கு தீர்வு
நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த நிகழ்ச்சியை மாவட்ட நீதிபதி அருள்முருகன் தொடங்கி வைத்தார். மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன், சட்ட பணிகள் குழு செயலாளர் நம்பிராஜன், போக்சோ மாவட்ட நீதிபதி சந்திரா மற்றும் சார்பு நீதிபதிகள், வக்கீல்கள், வழக்கு தொடர்ந்தவர்கள், எதிர் மனுதாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளில் பேச்சுவார்த்தை மூலம் ஆயிரத்து 792 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் ரூ.7 கோடியே 16 லட்சத்து 85 ஆயிரத்து 121 வசூலிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story