நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி-பாதிப்பு எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்தது


நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி-பாதிப்பு எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 12 Dec 2021 5:13 PM GMT (Updated: 12 Dec 2021 5:13 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்தது.

நாமக்கல்:
2 பெண்கள் பலி
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 514 பேர் பலியாகி இருந்தனர். இந்தநிலையில் நேற்று ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெப்படை பகுதியை சேர்ந்த 62 வயது மூதாட்டி மற்றும் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிராயூர் பகுதியை சேர்ந்த 58 வயது பெண் என 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 516 ஆக அதிகரித்து உள்ளது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 53,969 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 53,971 ஆக அதிகரித்தது.
460 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று புதிதாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 16 ஆக அதிகரித்து உள்ளது.
நேற்று 45 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 53,040 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தற்போது 460 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story