மின்சாரம் நிறுத்தம்


மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Dec 2021 5:14 PM GMT (Updated: 19 Dec 2021 5:14 PM GMT)

இளையான்குடி, இடையமேலூரில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சிவகங்கை, 
இடையமேலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புபணிகள் நடைபெறுவதால் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கூட்டுறவு பட்டி, இடையமேலூர், வில்லி பட்டி, மேலப்பூங்குடி, சாலூர், மலம்பட்டி, ஒக்கப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.இளையான்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் நாளை  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை  இளையான்குடி, புதூர், கண்ணமங்கலம், தாயமங்கலம், சோதுகுடி, கருஞ்சுத்தி, நகரகுடி, கீழாயூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும் மின் வினியோகம் தடை செய்யப்படும் என்று செயற்பொறியாளர் செல்வம் அறிவித்துள்ளார்.

Next Story