மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி

x
தினத்தந்தி 30 Dec 2021 3:42 AM IST (Updated: 30 Dec 2021 3:42 AM IST)
மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியானார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே பைப்பூர் பகுதியை சேர்ந்த இருசாக்கவுண்டர் மகன் விஜயகுமார் (வயது 21). கட்டிட தொழிலாளி. இவர், தாரமங்கலம் 6-வது வார்டு பகுதியில் ஒரு வீட்டில் கட்டிட வேலை செய்து வந்தார். அப்போது வீட்டின் அருகில் சென்ற ஒயர் மீது அவரது உடல் உரசியதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கிய விஜயகுமார் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் விஜயகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





