நிதி நிறுவன ஊழியர் லாரி மோதி பலி


நிதி நிறுவன ஊழியர் லாரி மோதி பலி
x
தினத்தந்தி 1 Jan 2022 6:43 PM GMT (Updated: 1 Jan 2022 6:43 PM GMT)

நிதி நிறுவன ஊழியர் லாரி மோதி பலியானர்.

கரூர், 
நிதி நிறுவன ஊழியர்
கரூர் மாவட்டம் காளையாபட்டியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 23). இவர் கரூரில் உள்ள நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் கரூர்-கோவை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் பார்த்தசாரதி சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
போலீசார் விசாரணை
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பார்த்தசாரதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 
மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story