நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 Jan 2022 6:08 PM GMT (Updated: 7 Jan 2022 6:08 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 54,703 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே பிற மாவட்ட பட்டியலில் இருந்து 5 பேரின் பெயர்கள் நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,708 ஆக ஆனது. இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. 
அதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,738 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் 112 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை கொரோனாவுக்கு 519 பேர் பலியாகி உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் 53,999 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 220 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story