மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; அரசு பஸ் டிரைவர் சாவு


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; அரசு பஸ் டிரைவர் சாவு
x
தினத்தந்தி 10 Jan 2022 3:55 PM GMT (Updated: 10 Jan 2022 3:55 PM GMT)

அந்தியூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் அரசு பஸ் டிரைவர் இறந்தார்.

அந்தியூர் தவுட்டுப்பாளையம் நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர் சேகர் (வயது 48). இவர் பவானி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார்.  
சம்பவத்தன்று இவர் அந்தியூரில் இருந்து ஒலகடம் அருகே குழந்தைபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்தியூரை அடுத்த பச்சாம்பாளையம் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் ஒன்று சேகரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. 
இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து சேகர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இறந்த சேகருக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 
இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story