திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 700-ஐ தாண்டியது


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 700-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 10 Jan 2022 4:14 PM GMT (Updated: 10 Jan 2022 4:14 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து நேற்று கொரோனாவால் 702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 720 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 109 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரியில் 2,745 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோனா தொற்றால் 1,866 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story