முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை


முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 Jan 2022 6:22 PM GMT (Updated: 10 Jan 2022 6:22 PM GMT)

முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

பத்மநாபபுரம்:
தக்கலை அருகே வேளிமலை பெருஞ்சிலம்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 71), கூலி தொழிலாளி. இவர் நோய்வாய்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று கணேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கொற்றிக்கோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கொற்றிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story