வனப்பகுதிக்கு ரோந்து சென்ற ஊழியர் திடீர் சாவு


வனப்பகுதிக்கு ரோந்து சென்ற ஊழியர் திடீர் சாவு
x
தினத்தந்தி 10 Jan 2022 7:56 PM GMT (Updated: 10 Jan 2022 7:56 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதிக்கு ரோந்து சென்ற ஊழியர் திடீரென இறந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 51). முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையில் சேர்ந்தார். இந்தநிலையில் நேற்று மாலை வனத்துறை ஊழியர்கள் சிலருடன்  ரோந்து பணிக்கு மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள அழகர்கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சுருண்டு மயங்கி விழுந்தார். இதுகுறித்து தகவல்அறிந்த வனத்துறை ஊழியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறை ஊழியர்கள் முத்துக்குமாரை மலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் தூக்கி வந்தனர். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது அவர் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது.


Related Tags :
Next Story