ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று


ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 11 Jan 2022 6:15 PM GMT (Updated: 11 Jan 2022 6:15 PM GMT)

ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

புதுக்கோட்டை:
30 பேருக்கு கொரோனா 
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒற்றை இலக்கத்தில் இருந்து இரட்டை இலக்கத்தில் மாறியதில் தினசரி பாதிப்பு முந்தைய நாளைவிட இரட்டிப்பாக உயருகிறது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 495 ஆக அதிகரித்துள்ளது. 
மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 8 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 977 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 97 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 421 ஆக உள்ளது.

Next Story