நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா-முதியவர் பலி


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா-முதியவர் பலி
x
தினத்தந்தி 12 Jan 2022 3:41 PM GMT (Updated: 12 Jan 2022 3:41 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி முதியவர் ஒருவர் இறந்தார்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி முதியவர் ஒருவர் இறந்தார்.
168 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று  வரை 55 ஆயிரத்து 56 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 8 பேரின் பெயர் பிற மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 55 ஆயிரத்து 48 ஆக குறைந்தது. இதற்கிடையே இன்று ஒரே நாளில் மேலும் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 216 ஆக அதிகரித்து உள்ளது.
முதியவர் பலி
இதற்கிடையே இன்று மாவட்டத்தில் 33 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 54 ஆயிரத்து 197 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 497 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு 521 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இன்று ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 79 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 522 ஆக அதிகரித்து உள்ளது.


Next Story