வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 12 Jan 2022 7:49 PM GMT (Updated: 12 Jan 2022 7:49 PM GMT)

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள பாறைப்பட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 74). இவர் நேற்று கரிவலம்வந்தநல்லூர் அழகுநாச்சியார்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் வேலுச்சாமி பரிதாபமாக உயிர் இழந்தார். தகவல் அறிந்ததும் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவல் அருகில் உள்ள பச்சேரியை சேர்ந்தவர் வைரமுத்து மகன் சின்னதுரை (24). இவர் பெருமாள்பட்டியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று காலை பெருமாள்பட்டியில் டீ சாப்பிடுவதற்காக சென்றபோது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி இவர் மீது மோதியது. இதில் காயமடைந்த சின்னத்துரை சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்துகள் குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story