மூதாட்டியிடம் நகை பறிப்பு; வாலிபர் கைது


மூதாட்டியிடம் நகை பறிப்பு; வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Jan 2022 9:34 PM GMT (Updated: 12 Jan 2022 9:34 PM GMT)

மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரம் நடுத்தெருவை சேர்ந்தவர் அற்புத ஜெபமாலை இவருடைய மனைவி ரெஜிஸ் மேரி (வயது 77). கடந்த 10-ந் தேதி இவர் மன்னார்புரம் சந்திப்பில் உள்ள கிறிஸ்தவ ஆலய கொடி ஏற்றத்தில் கலந்து கொள்ள நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். நேற்று இந்த வழக்கில் தொடர்புடைய வடக்கு கும்பிளம்பாட்டை சேர்ந்த செல்லத்துரை மகன் ராஜா என்ற பாம்பே ராஜா (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தங்க சங்கிலியையும் செயின் பறிப்பிற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story