ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி சாவு

முடிச்சூர் பெரிய ஏரியில் தனது தோழி ஒருவருடன் குளிக்கச் சென்ற மாணவி ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
சென்னையை அடுத்த தாம்பரம் முடிச்சூர் லட்சுமி நகரை சேர்ந்தவர் பெரியசாமி முத்தையா. இவருடைய மகள் வினோதினி(வயது 14). இவர், வானகரத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை முடிச்சூர் பெரிய ஏரியில் தனது தோழி ஒருவருடன் குளிக்கச் சென்ற வினோதினி, ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள், ஏரியில் மூழ்கி பலியான மாணவி உடலை மீட்டனர்.
இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான மாணவி உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






