சென்னை மாநகராட்சி தேர்தலையொட்டி போலீஸ் கமிஷனர் முக்கிய ஆலோசனை

x
தினத்தந்தி 7 Feb 2022 3:57 PM IST (Updated: 7 Feb 2022 3:57 PM IST)
சென்னை மாநகராட்சி தேர்தலையொட்டி போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனையின் போது, குண்டர் சட்ட கைது நடவடிக்கை, பிணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, பிணையை மீறி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சீராய்வு செய்யப்பட்டது.
வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது குறித்தும், வாகன தணிக்கை குறித்தும் பல முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டன.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





