வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்


வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Feb 2022 8:17 PM GMT (Updated: 12 Feb 2022 8:17 PM GMT)

சிவகாசி அருேக வாகன சோதனையில் ரூ.3 லட்சம் சிக்கியது.

சிவகாசி, 
சிவகாசி அருேக வாகன சோதனையில் ரூ.3 லட்சம் சிக்கியது. 
வாகன சோதனை 
சிவகாசி தேர்தல் பறக்கும் படை அதிகாரி விஜிமாரி தலைமையில் பறக்கும் படையினர் சிவகாசி - விருதுநகர் மெயின்ரோட்டில் உள்ள காரனேசன் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
 அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்களில் வந்த ஞானகிரி ரோட்டை சேர்ந்த செல்வராஜன் என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அவரிடம் ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 180 இருந்தது. இந்த பணத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ரொக்க பணத்தை பறிமுதல் செய்து பறக்கும் படை அதிகாரிகள் மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைத்தனர். 
பணம் பறிமுதல் 
அதேபோல பறக்கும் படையினர் சிவகாசி-வெம்ப கோட்டை ரோட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்ேபாது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த செவல்பட்டி சுந்தரபாண்டியன் என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்தை எவ்வித ஆவணங்களும் இன்றி கொண்டு சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து சிவகாசி மாநகராட்சி அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

Next Story