மாமல்லபுரம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

x
தினத்தந்தி 18 Feb 2022 8:56 PM IST (Updated: 18 Feb 2022 8:56 PM IST)
மாமல்லபுரம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கரை ஒதுங்கியது.
மாமல்லபுரம்,
மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், தேவனேரி அருகே கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு தனியார் பண்ணை வீடு அருகே 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





