தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு பிச்சி கிலோ ரூ.1,750-க்கு விற்பனை


தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு பிச்சி கிலோ ரூ.1,750-க்கு விற்பனை
x
தினத்தந்தி 17 March 2022 7:08 PM GMT (Updated: 17 March 2022 7:08 PM GMT)

தோவாளை மார்க்கெட்டில் பங்குனி உத்திரத்தைெயாட்டி பூக்கள் விலை கிடு கிடுவென உயர்ந்தது. பிச்சி கிலோ ரூ.1,750-க்கு விற்பனையானது.

ஆரல்வாய்மொழி,
தோவாளை மார்க்கெட்டில் பங்குனி உத்திரத்தைெயாட்டி பூக்கள் விலை கிடு கிடுவென உயர்ந்தது. பிச்சி கிலோ ரூ.1,750-க்கு விற்பனையானது. 
பூ மார்க்கெட்
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வரும். குறிப்பாக கொடைக்கானல், ஊட்டி, சேலம், திண்டுக்கல், மதுரை, வாடிப்பட்டி, செம்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்தும், குமரி மாவட்டத்தின் செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி மற்றும் நெல்லை மாவட்டத்தின் காவல்கிணறு, ஆவரைக்குளம் ஆகிய பகுதியில் இருந்தும் இங்கு பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படும்.
பண்டிகை காலங்களில் பூக்களின் விலை உயர்ந்தும், மற்ற நாட்களில் விலை குறைந்தும் காணப்படும்.
பிச்சி விலை உயர்வு
 இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ரூ.1,100-க்கு விற்பனையான பிச்சி பூ ரூ.650 உயர்ந்து கிலோ ரூ.1,750-க்கு விற்பனையானது. முல்லை ரூ.600 உயர்ந்து ரூ.1,500-க்கு விற்பனையானது.
 இதுகுறித்து பூவியாபாரி கிருஷ்ணகுமார் கூறுகையில், நாளை(அதாவது இன்று)பங்குனி உத்திரம்  என்பதால் பூக்களின் தேவை அதிகமாக இருந்தது. இதனால், வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றதால் விலை உயர்ந்தது என்றார். 
விலை விவரம்
தோவாளை மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-
அரளிப்பூ ரூ.280, மல்லிகை ரூ.750, கனகாம்பரம் ரூ.500, வாடாமல்லி ரூ.70, கேந்தி ரூ.50, சம்பங்கி ரூ.170, ரோஜா (100 எண்ணம்) ரூ.30, பட்டன்ரோஸ் ரூ.100, துளசி ரூ.60, தாமரை (100 எண்ணம்) ரூ.500, பச்சை ரூ.8, கோழிப்பூ ரூ.60, கொழுந்து ரூ.80, மருக்கொழுந்து (கட்டு) ரூ.100, மஞ்சள்கேந்தி ரூ.40,மஞ்சள் சிவந்தி ரூ.180, வெள்ளை சிவந்தி ரூ.200, ஸ்டெம்புரோஸ் (1கட்டு) ரூ.200, என விற்பனையானது.

Next Story