கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 21 March 2022 7:11 PM IST (Updated: 21 March 2022 7:11 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில தொழிலாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமாநில தொழிலாளி

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் விஜயகுமார் ஜெய்ஸ்வால் (வயது 31). இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து, கும்மிடிப்பூண்டி அடுத்த பாப்பன்குப்பம் கிராமத்தில் தனியே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விஜயகுமார் ஜெய்ஸ்வால் வேலைக்கு செல்லவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காலையில் அவரை பார்த்த சூழலில் அதற்கு பிறகு வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. வீட்டை விட்டு அவர் வெளியே வரவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனையடுத்து அவரை தேடி சென்ற நண்பர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, விஜயகுமார் ஜெய்ஸ்வால் அங்குள்ள குழாயில் வேட்டியை கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.

அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடமாநில தொழிலாளியின் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story