சிறந்து விளங்கும் விவசாயிகள் பரிசு பெற விண்ணப்பிக்கலாம்


சிறந்து விளங்கும் விவசாயிகள் பரிசு பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 2 April 2022 8:18 PM GMT (Updated: 2 April 2022 8:18 PM GMT)

சிறந்து விளங்கும் விவசாயிகள் பரிசு பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்து, அதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. எனவே தகுதியான விவசாயிகள் www.tnhorticulture.tn.gov.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 7-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story