ஆடு திருட முயன்ற மாணவர்கள் கைது

x
தினத்தந்தி 6 April 2022 12:55 AM IST (Updated: 6 April 2022 12:55 AM IST)
ஆடு திருட முயன்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டு அருகே நவலிகுளம் பகுதியில் 2 சிறுவர்கள் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டு இருந்தனர். இதனையடுத்து கிராம மக்கள் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் ஆடு திருட முயற்சித்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் 10-ம் வகுப்பு மாணவர்கள் என தெரியவந்தது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





