தூத்துக்குடியில் 12- ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்


தூத்துக்குடியில் 12- ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்
x
தினத்தந்தி 8 April 2022 7:34 PM IST (Updated: 8 April 2022 7:34 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 12- ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி:
தூத்துக்குடி நகர துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 12-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதனால் போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, பீச் ரோடு, இனிகோநகர், வி.இ.ரோடு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, மீனாட்சிபுரம், தாமோதர நகர், எட்டயபுரம் ரோடு, தெப்பக்குளம், சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, சந்தை ரோடு, வடக்கு காட்டன் ரோடு, தெற்கு காட்டன் ரோடு, ஜார்ஜ் ரோடு, சண்முகபுரம், ஸ்டேட் வங்கி காலனி, இன்னாசியார்புரம், எழில்நகர், அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட்நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வினியோக செயற்பொறியாளர் (பொறுப்பு) வெங்கடேசுவரன் தெரிவித்து உள்ளார்.
1 More update

Next Story