குள்ளஞ்சாவடி அருகே கொதிக்கும் வெந்நீர் கொட்டி 5 வயது சிறுமி பலி


குள்ளஞ்சாவடி அருகே கொதிக்கும் வெந்நீர் கொட்டி 5 வயது சிறுமி பலி
x
தினத்தந்தி 19 April 2022 9:44 PM IST (Updated: 19 April 2022 9:44 PM IST)
t-max-icont-min-icon

குள்ளஞ்சாவடி அருகே கொதிக்கும் வெந்நீர் கொட்டி 5 வயது சிறுமி பலி

குறிஞ்சிப்பாடி

குள்ளஞ்சாவடி அருகே உள்ள மேல் பூவாணிகுப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமன்(வயது 31) விவசாயி. இவரது மகள் யாஷினி(5). சம்பவத்தன்று மதியம் ராமனின் மனைவி விறகு அடுப்பில் குண்டாவில் வெந்நீர் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த யாஷினி அடுப்பில் இருந்த குண்டாவை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் கொதிக்கும் வெந்நீர் அவள் மீது கொட்டியதால் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டாள். இந்த சத்தம் கேட்டு ராமனின் மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த யாஷினியை சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவள் பரிதாபமாக இறந்தாள். 
இதுகுறித்து ராமன் கொடுத்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story