காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை


காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 23 April 2022 6:44 PM GMT (Updated: 23 April 2022 6:44 PM GMT)

தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருமயம், 
திருமயம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்பட பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காலபைரவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவருக்கு நெய் தீபம், மிளகு தீபம், பூசணிக்காய் தீபம் உள்பட பல்வேறு வகையான தீபங்களை ஏற்றி அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு மகா ருத்ர யாகமும் அதனை தொடர்ந்து 12 மணியளவில் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது. இதில் பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியிலுள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கந்தர்வகோட்டை ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story