பிளஸ்2 மாணவி தற்கொலை


பிளஸ்2 மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 29 April 2022 5:03 PM GMT (Updated: 29 April 2022 5:03 PM GMT)

செல்போனில் பேசியதை கண்டித்ததால் பிளஸ்2 மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை, 
மதுரை சிலையநேரி கருமாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகள் கவிதா (வயது 18). அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். எப்போதும் இவர் செல்போனில் பேசிக்கொண்டே இருந்ததால் அவரை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனவருத்தம் அடைந்த கவிதா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story