வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்


வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 29 April 2022 5:16 PM GMT (Updated: 29 April 2022 5:16 PM GMT)

வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அடுத்த நடுப்பட்டி தேவேந்திரர் தெரு பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகன் விஜய் (வயது 27). முதுநிலை பட்டதாரியான இவர் பேக்கரி தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சம்பத் மகள் ஷாலினி (24). இளங்கலை பட்டதாரி இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். ஆனால் இவர்களின் காதலுக்கு இரு தரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திருமணம் செய்ய முடிவு செய்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல் ஜோடி தங்களுக்கு கேட்டு நேற்று மதியம் வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் இரதரப்பு பெற்றோரையும் அழைத்து பேசி காதல் ஜோடிகளை அனுப்பி வைத்தனர்.

Next Story