சோழசிராமணியில் சிறுவன் மயங்கி விழுந்து சாவு போலீசார் விசாரணை


சோழசிராமணியில் சிறுவன் மயங்கி விழுந்து சாவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 April 2022 5:18 PM GMT (Updated: 29 April 2022 5:18 PM GMT)

சோழசிராமணியில் சிறுவன் மயங்கி விழுந்து சாவு போலீசார் விசாரணை

பரமத்திவேலூர்:
ஈரோடு மாவட்டம் பாசூர் பகுதியை சேர்ந்தவர் செல்வன் (வயது 43). கூலித்தொழிலாளி. இவர் தற்போது குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி பகுதியில் தங்கி கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் மணிகண்டன் (19). இவர் பிளஸ்-2 படித்து விட்டு சோழசிராமணியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தார். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் பேக்கரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story