விஷம் தின்று என்ஜினீயர் தற்கொலை


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 29 April 2022 6:28 PM GMT (Updated: 29 April 2022 6:28 PM GMT)

நச்சலூர் அருகே விஷம் தின்று என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

நச்சலூர், 
என்ஜினீயர்
கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள தெற்கு மாடு விழுந்தான் பாறை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களது மகன் கருப்பசாமி (வயது 24). டிப்ளமோ மெக்கானிக் என்ஜினீயர். இவர் விராலிமலையில் உள்ள தனியார் கம்பெனியில் மெக்கானிக் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். கருப்பசாமி சற்று மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அவர் திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. 
தற்கொலை
இந்நிலையில் கடந்த 23-ந் தேதியன்று கருப்பசாமி தனது வீட்டில் இருந்த எலி பேஸ்டை (விஷம்) தின்று விட்டு, தாயார் பழனியம்மாளிடம் கூறியுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் கருப்பசாமியை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். 
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்  கருப்பசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து பழனியம்மாள் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story