யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 29 April 2022 7:46 PM GMT (Updated: 29 April 2022 7:46 PM GMT)

ராதாபுரம் யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

ராதாபுரம்:
 
ராதாபுரம் யூனியன் கூடங்குளத்தில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக் குடங்களுடன், யூனியன் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் இதுதொடர்பாக ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சையாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அதில், “தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் கூடங்குளத்தையும் இணைக்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலைய அலுவலக பணியாளர்களுக்கு கடல் நீரை சுத்திகரித்து அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் கூடங்குளம் மக்களுக்கும் கடல் நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட அவர், உடனடியாக லாரி மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

Next Story