பனைமரத்தில் ஏறிய தொழிலாளி தவறி விழுந்து பலி


பனைமரத்தில் ஏறிய தொழிலாளி தவறி விழுந்து பலி
x
தினத்தந்தி 29 April 2022 11:16 PM GMT (Updated: 29 April 2022 11:16 PM GMT)

பனைமரத்தில் ஏறிய தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தார்.

தா.பேட்டை:
துறையூர் தாலுகா, அய்யம்பாளையம் வடக்குத்தெரு பகுதியில் வசித்து வந்தவர் கந்தசாமி(வயது 52). விவசாய கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள பனை மரத்தில் நுங்கு பறிப்பதற்காக ஏறியபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து கந்தசாமியின் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story