குடும்பத்தகராறு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


குடும்பத்தகராறு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 April 2022 1:49 PM GMT (Updated: 30 April 2022 1:49 PM GMT)

பள்ளிப்பட்டு அருகே குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளிப்பட்டு,

பள்ளிப்பட்டு தாலுகா கோர குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரி என்கிற பாலாஜி (வயது 25). இவருக்கு ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் கிராமத்தை சேர்ந்த மாமன் மகள் ஜீவிதா என்ற வினிதா (21) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாதத்தில் தீட்சிதா என்ற பெண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக வினிதா, ஹரி ஆகியோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த வினிதா வீட்டில் தூக்குபோட்டு கொண்டார். இதை பார்த்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வினிதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணமான 21 மாதத்தில் வினிதா தற்கொலை செய்துகொண்டதால் இவர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா என்று திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story