குளத்தில் மூழ்கி மூதாட்டி சாவு


குளத்தில் மூழ்கி மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 30 April 2022 5:12 PM GMT (Updated: 30 April 2022 5:12 PM GMT)

முத்துப்பேட்டையில் குளத்தில் மூழ்கி மூதாட்டி சாவு

முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை தெற்குக்காடு பகுதியை சேர்ந்தவர் சேக்கமுத்து. இவரது மனைவி அமிர்தம் (வயது60). நேற்றுமுன்தினம் இவர் அருகில் உள்ள கோசாகுளத்திற்கு குளிக்க சென்றார். நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல இடங்களில் தேடினர். அப்போது குளத்தின் கரையில் மூதாட்டி உடைகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குளத்தில் இறங்கி தேடினர். அப்போது குளத்தில் மூழ்கி இறந்த மூதாட்டியின் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். இதுகுறித்து அமிர்தம் மகன் பாஸ்கரன் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story