அக்காளை வெட்டிக் கொன்று விட்டு அரிவாளுடன் நின்றிருந்தவரால் பரபரப்பு


அக்காளை வெட்டிக் கொன்று விட்டு அரிவாளுடன் நின்றிருந்தவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 May 2022 7:51 PM GMT (Updated: 3 May 2022 7:51 PM GMT)

ராஜபாளையத்தில் பட்டப்பகலில் அக்காளை வெட்டிக் கொன்றுவிட்டு அரிவாளுடன் நின்றிருந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜபாளையம்,
 ராஜபாளையத்தில் பட்டப்பகலில் அக்காளை வெட்டிக் கொன்றுவிட்டு அரிவாளுடன் நின்றிருந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீ்ஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சொத்து தகராறு 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டி.பி.மில்ஸ் சாலையில் உள்ள செவல்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). இவருடைய மூத்த சகோதரி பாஞ்சாலி (58). இவர் அழகாபுரியில் வசித்து வருகிறார்.
செவல்பட்டியில் இவர்களுடைய பூர்வீக வீடு உள்ளது. இந்த சொத்து தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் பூர்வீக வீட்டின் முன் வைத்து, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
படுகொலை 
வாக்குவாதம் முற்றிய நிலையில் ரமேஷ், அரிவாளால் பாஞ்சாலியை வெட்டி உள்ளார். கழுத்து பகுதியில் படுகாயம் அடைந்த பாஞ்சாலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் ரமேஷ் அரிவாளுடன் அங்கேயே நின்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார், ரமேசை பிடித்தனர். பின்னர் பாஞ்சாலியின் உடலை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இ்ந்த சம்பவம் தொடர்பாக ரமேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story