அஞ்செட்டி அருகே யானை தாக்கி முதியவர் காயம்


அஞ்செட்டி அருகே யானை தாக்கி முதியவர் காயம்
x
தினத்தந்தி 4 May 2022 6:00 PM GMT (Updated: 4 May 2022 6:00 PM GMT)

அஞ்செட்டி அருகே யானை தாக்கி முதியவர் காயம் அடைந்தார்.

தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி அருகே உள்ள வண்ணாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 65). இவர் வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றார். அங்கு பதுங்கி இருந்த காட்டு யானை அவரை விரட்டி சென்று தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அஞ்செட்டி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story